இத்தாலியில் செல்பி எடுத்தால் அபராதம்!
இத்தாலியில் எதிர்வரும் காலத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த தீர்மானத்தை இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் நகர அதிகாரிகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 275 யூரோ அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவு தொடர்பில் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்க முயல்வதால் பகலில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed